Thursday, October 1, 2009

பெண் என்றால்... பொறுமை, மேன்மை, தன்மை...
இன்னும் பெருமைகள் பல பல....

ஆனால் இன்றோ...
அவைகள் இருந்த தடம் தெரியவில்லை....

காரணம்,மாறி வரும் கலாச்சாரம்,
இவைகள் விரும்பி ஏற்பவை யா?
அல்ல கலாச்சாரத்தின் சீற்றமா??

பெண்ணாக இருந்தும்
விடை காணமுடியவில்லையா...
தெரியவில்லையா ....
புலப்படவில்லை இன்று வரை.......

ஒன்று ஊருதிபடுகிறது...
அவை யாவும்
பணத்தின் மாயை....

என்றேனும் விலகும் என்ற
வாஞ்சயுடன்..........
கனவுகளுடன் நான்......

Friday, September 19, 2008


என்றும் நினைத்திருப்பேன்...

என்றாவது மறந்துருபேன்.......

அன்று நான் இறந்துருபேன்....



தவம்

பெண்:
என்ன தவம் செய்தேனோ ....
பெண்ணாக பிறப்பதற்கு ....
பிள்ளையை சுமப்பதற்கு!

Tuesday, September 9, 2008

இறக்க சொல்கிறாய் - ஒன்றை மறந்து
நான் இல்லை என்றால்
நி இல்லை என்பதை!!!!

Monday, June 9, 2008

பிறக்கும் பிள்ளைக்கு

தான் போகும்

இடம் தெரியாது.... (அநாதை இல்லம் )

ஒன்றும் அறியா

பச்சிலம் குழந்தை

தாயின் மடி தேடி

அழுகிறது....

தொட்டிலில் உறங்கியபடி...

பாவம்

அதற்கு தெரியாது

தான் கிடப்பது

அரசு தொட்டிலில் .......

பெண்கள்

பெயர் ஒன்றே போதும் குடும்பம் எளிதில் விளங்கும்...

Friday, April 11, 2008

தோழி

பக்கத்தில் இருக்கும் பத்திர காளி
உன் நட்பு என்ற அருள் வேண்டி நாளும்
வணங்கும் சிறிய பூசாரி யாக உனது தோழன்

Thursday, April 10, 2008

வாழ்க்கை

இன்று நான்
நாளை நீ

இறக்கத்தான செய்கிறோம்
பிறப்போம் என்று தெரியாமல்....

இது மாறும் விதியா
அல்ல
வாழும் நீயதியா....

யோசிப்போம் வாழ்வை நேசிப்போம்
வாழும் ஒவ்வொரு ஒவ்வொரு நொடியும் !!!!!


Monday, April 7, 2008

பெண்

கருவில் இருப்பது
பெண்

என்று
அழிக்க துடிக்கும்
கணவனுக்கு தெரியாதா!!!!

தன் மனையாலும் பெண் என்று....

தோழி

பிரிவு .....
ஆழ்மனதின் போராட்டம்...
இந்த போராட்டத்திற்கு உரியவள்
எங்கோ ஒரு திசையில்
என் கண்மறைவில் என் கண்ணீராய் ....
என் நேசம்
தென்றலாய் போய் சேருமா ?
என் அன்புக்குரியவளிடம் ......

தோழி

தோழி:
சிரித்து பேசி
மகிழ்ந்தபோது....
ஒரே தட்டில்
உண்டபோது....
ஒன்றாக விளையாடி
உறங்கி .........
அப்போதெல்லாம்
உணராத உன் அன்பை......
பிரிவு
என்னும் ஒற்றை சொல்
புரிய வைத்தது....
உனக்கான என் அன்பை
என் மனதில் உன் ஆழத்தை
உன் மனதில்
நம் நட்பை.........